CBSE New Rules for Board Exam 2019: மாணவர்கள் கடிகாரத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என்றும், சுவர் கடிகாரம் தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு மையத்துக்குள் நுழைய கடைசி நேரம் - காலை 10 மணி (நீண்ட மணி)
கேள்வித்தாள் மற்றும் பேப்பர் விநியோகம் - காலை 10.15 மணி (குறுகிய மணி)
தேர்வு துவக்கம் - காலை 10.30 மணி (நீண்ட மணி)
ஒரு மணி நேரம் கழித்து - காலை 11.30 மணி (குறுகிய மணி)
இரண்டு மணி நேரம் கழித்து - நண்பகல்12.30 மணி (குறுகிய மணி)
இரண்டரை மணி நேரம் கழித்து - மதியம் 1.00 மணி (குறுகிய மணி)
தேர்வு முடிவில் - (நீண்ட மணி)
போக்குவரத்து மற்றும் பிற உதவிகளுக்காக பள்ளிகள் தங்களின் உள்ளூர் நிர்வாகத்தை நாடலாம் என சி.பி.எஸ்.சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைப்பற்றி, ”மாவட்ட மேஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை உதவிக்கு நாடலாம்” என்கிறார் அதிகாரி சன்யாம் பரத்வாஜ்.