Advertisment

CBSE Exam; சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு; இந்த விதிமுறைகளில் மாற்றம்

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 5ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும் முடிவடையும்; வாரிய தெரிவித்துள்ள புதிய வழிகாட்டுதல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE Exam; சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு; இந்த விதிமுறைகளில் மாற்றம்

இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வில் சுமார் 38 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். (பிரதிநிதித்துவ படம். எக்ஸ்பிரஸ் புகைப்படம் - அருள் ஹாரிசன்)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்தும் அனைத்து இணைப்புப் பள்ளிகளுக்கும் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Advertisment

சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பொதுத் தேர்வுகளை நடத்தும் அனைத்துப் பள்ளிகளும், தேர்வு முடிந்த பிறகு விடைப் புத்தகங்களை அஞ்சல் சேவைகள் மூலம் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பும்போது மட்டுமே அனைத்து விடைப் புத்தகங்களும் பிளாஸ்டிக் பைகளால் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், இந்த விடை புத்தகங்களை நேரிலோ அல்லது நகர ஒருங்கிணைப்பாளரின் உதவியோடும் மண்டல அலுவலகத்திற்கு வழங்கினால், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட வேண்டியதில்லை.

இதையும் படியுங்கள்: “தமிழகத்தின் கல்விக்கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்”- ஜவகர் நேசன்

தேர்வின் போது வாட்ஸ்அப் செய்தியை அனுப்பக்கூடாது, அது சி.பி.எஸ்.இ உடனான தொடர்புக்காகவோ அல்லது போர்டு தேர்வுகளை நடத்துவது தொடர்பான வேறு எந்த அதிகாரியுடன் இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் செய்யக்கூடாது என வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கூடுதலாக, வினாத்தாள்கள் பற்றிய அனைத்து அவதானிப்புகளும் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது: http://parikshasangam.cbse.gov.in/frmSchConduct?REF=Exam%20Activities

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 5ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும் முடிவடையும். 10 ஆம் வகுப்புக்கு பதிவு செய்யப்பட்ட மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 21.8 லட்சம், அவர்களில் 9.39 லட்சம் மாணவிகள், 12.4 லட்சம் மாணவர்கள் மற்றும் 10 மாணவர்கள் 'மற்றவர்கள்' பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 16.9 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு வாரியத் தேர்வுகளுக்குப் பதிவு செய்திருப்பதால், 12ஆம் வகுப்புக்கு பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த 16 லட்சம் மாணவர்களில் 7.4 லட்சம் பேர் மாணவிகள், 9.51 பேர் ஆண்கள் மற்றும் 5 பேர் ‘மற்றவர்கள்’ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbse Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment