CBSE Board 10th Class Exam: மத்திய பாட திட்டத்தில் பயிலும் மாணவர்களான 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இன்று தேர்வு ஆரம்பித்திருக்கிறது. அதிகாரப்பூர்வ தகவலின் படி, 18.19 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியிருக்கிறார்கள்.
இந்த வருடம் மொத்தம் 31, 14,821, 10 மற்றும் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்கள் 4,974 இந்திய தேர்வு மையங்களிலும், வெளிநாட்டு தேர்வு மையங்கள் 78-லும் தேர்வெழுதுகிறார்கள்.
இதற்கிடையில், சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புக்கான முக்கிய பாடத்தின் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச்-29 அன்று முடிவடைகிறது.
CBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு
3 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு சமயத்தில் வரும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் சார்பில் கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.