முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுமென சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ நிர்வாகம் 2019-20-ம் ஆண்டுக்கான அட்டவணையை தயார் செய்து வருகிறது. இதில் தினம் ஒரு வகுப்பு உடற்கல்வி வகுப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் முதல் கடைபிடிக்கப்படும் இதன் விரிவான தகவலறிக்கையை சி.பி.எஸ்.இ தளத்தில் விரைவில் மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.