சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்கப்பட இருக்கிறது.
வாரியத்தின் தேர்வுக் குழுவால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.
“2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்” என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
இந்த ஆவணம் சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் தங்களின் தேவையை தெரியப்படுத்தி இதன் நகலை வாரியத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் போல், மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்.
மேம்பட்ட சோதனைக்காக (Improvement examination) தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அந்தப் பாடத்தின் மதிப்பெண் மட்டும் அறிக்கையாக வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.