பள்ளிக்கல்வித்துறையில் 5 முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், 3 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III-ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
த.ராஜந்திரன் (முதன்மை கல்வி அலுவலர், திருவள்ளூர்) - சென்னை முதன்மை கல்வி அலுவலராக மாற்றம்
ஆர்.திருவளர்செல்வி (முதன்மை கல்வி அலுவலர், சென்னை) - திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக மாற்றம்
ஆர்.பூபதி (துணை இயக்குனர், சட்டம், தொடக்கக் கல்வி இயக்கம், சென்னை 6) - திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலராக மாற்றம்
ச.செந்திவேல்முருகன் (முதன்மை கல்வி அலுவலர், கன்னியாகுமரி) - துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6
எஸ். முருகேசன் (துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 6) - செயலாளர், தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை - 6
முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவோர்:
எஸ்.மணிவண்ணன் (மாவட்டக் கல்வி அலுவலர், உடுமலைப் பேட்டை, திருப்பூர்) - திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு
எம்.வேதரத்தினம் (மாவட்டக் கல்வி அலுவலர், நாகை) - துணை இயக்குனர்(சட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை - 6
எம்.இராமன் (மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்) - கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.