Advertisment

தேசிய கல்விக் கொள்கை: பொதுமக்களுடன் ஆளுநர் உரையாடுவார்

புதிய தேசிய கல்விக் கொள்கை அரசாங்கத்துக்கு சொந்தமான ஒன்று அல்ல, அது நாட்டுக்கானது. அதை அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தைப் பொருட்படுத்தாமல் கடிதம் மற்றும் திறமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

author-image
WebDesk
New Update
governors conference, pm narendra modi speec, தேசிய கல்விக் கொள்கை, பிரதமர் மோடி பேச்சு, புதிய தேசிய கல்விக் கொள்கை 2020, national education policy, pm narendra modi, nep 2020, new national education policy

புதிய தேசிய கல்விக் கொள்கை அரசாங்கத்துக்கானது அல்ல. அது நாட்டுக்கானது. அது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தைப் பொருட்படுத்தாமல் கடிதம் மற்றும் முழு சக்தியுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறினார்.

Advertisment

கொள்கை அமலாக்கம் குறித்து நாட்டில் பரவலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, தேசிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு என்பது கொள்கையை உருவாக்குவதற்கு வழிவகுத்த குடிமக்களின் ஆலோசனையைப் போலவே விரிவானதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையின் வெற்றிக்கான திறவுகோல் குடிமக்களின் ஈடுபாட்டில் உள்ளது என்று அவர் கூறினார். ராஷ்டிரபதி பவன் நடத்திய ஆளுநர்களின் ஆண்டு நிறைவு மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பிதமர் மோடி, “நம்முடைய விழிப்புணர்வு (தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதன் விதிகள் பற்றி) ஆலோசனை செயல்முறையைப் போலவே ஆழமாகவும் பரந்த அளவிலும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்த ஆவணத்தின் அனைத்து விதிகள் மற்றும் அபாயகரமான விவாதங்களைப் பற்றி விவாதிப்பது முக்கியம். மக்களின் மனதில் உள்ள அனைத்து சந்தேகங்களும் கேள்விகளும் தீர்க்கப்பட்ட பின்னரே இதை செயல்படுத்த முடியும்” என்று கூறினார்.

நாம் மாற்றத்தை நோக்கி செல்லும்போது மக்கள் மனதில், சந்தேகங்களும் கேள்விகள்ம் எழுவது இயல்பானது. பாடச் சுமைகளைக் குறைக்கும் நடவடிக்கை தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்று பெற்றோர்கள் ஆச்சரியப்படலாம். இத்தகைய படிப்புகளுக்கான பாடத்திட்டம் எவ்வாறு வடிவமைக்கப்படும் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை பூர்த்தி செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து பங்குதாரர்களுக்கு கேள்விகள் இருக்கக்கூடும்” என்று அவர் கூறினார். மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து ஆளுநர்களையும் செப்டம்பர் 25ம் தேதி வரை அவரவர்களுடைய மாநிலங்களில் குடிமக்கள் மத்தியில் இந்த கொள்கையைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கு காணொலி நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான வரைவு கட்டங்களில் கல்வி அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட பரந்த அளவிலான ஆலோசனையை பிரதமர் மோடி பாராட்டினார். தொழிற்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான தேசிய கல்விக் கொள்கையின் விதிகளை அவர் மேலும் எடுத்துரைத்தார். இளம் வயதிலேயே செய்முறை பயிற்சி அல்லது தொழிற்பயிற்சி ஆத்மநிர்பார் இந்தியாவை (தற்சார்பு இந்தியா) உருவாக்குவதற்கு உதவும் என்று அவர் கூறினார்.

“இந்தியாவை ஆத்மநிர்பார் (தற்சார்பு) உள்ள நாடாக உருவாக்குவதற்கு நம்முடைய இளைஞர்கள் திறமையானவர்களாக இருப்பது முக்கியம். இளம் வயதிலேயே தொழிற்கல்வி பெறுவது மற்றும் செய்முறைக் கற்றல் அவர்கள் வேலைக்குச் செல்ல உதவும். இது உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையில் நம்முடைய பங்கை அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். மேலும், “புதிய தேசிய கல்வி கொள்கை அறிவுக்கான வழிகாட்டலைப் பற்றியும் பேசுகிறது. உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால், மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்ப மாட்டார்கள். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வருகையால் நம்முடைய பல்கலைக்கழகங்கள் மிகவும் போட்டித்தன்மை அதிகரிக்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Narendra Modi Nep 2020
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment