இந்திய தொழில்நுட்பக் கல்வி என்றழைக்கப்படும் ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது 56 வது பட்டமளிப்பு விழாவை கடந்த ஜூலை 19 அன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விழாவின் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் நேரமின்மையால் விழாவைக் கடைசி நேரத்தில் காலவரையன்றி ஒத்திவைத்தது. இதனால், பல மாணவர்கள் கடும் இன்னல்களுக்கு உண்டானார்கள் என்ற செய்தியும் சமூக ஊடங்களில் பரவி வந்தன.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 30-ம் தேதியன்று பட்டமளிப்பு விழா நடக்க விருக்கிறது என்றும், இதில் திட்டமிட்டது போல் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, 2,300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் /அறிஞர்கள் விழாவின் போது பட்டங்களைப் பெற விருக்கின்றனர்
இந்த வருடம், ஐ.ஐ.டி மெட்ராஸ் தொடங்கி அறுபது ஆண்டுகள் கடந்து தனது வைரவிழாவை சில நாட்களுக்கு முன் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.