Advertisment

உயர் வகுப்பு 10% இட ஒதுக்கீடு: கைவிரித்த ஐஐடி

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உயர் வகுப்பு 10% இட ஒதுக்கீடு: கைவிரித்த ஐஐடி

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 2021 கல்வி ஆண்டிற்குள், 10% இட ஒதுக்கீடு செய்யும் காலக்கெடுவை, ஓராண்டு நீட்டிக்குமாறு ஐஐடி கல்வி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஊரடங்கிற்கு பின் கல்லூரிகள் திறக்கப்படும்போது, விடுதிகளில் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டிய சவாலை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை எழுப்பப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது.

Advertisment

கடந்த மாதம் இது தொடர்பாக் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் கூட்டாக, மத்திய அரசை அணுகியதாக தெரிய வருகிறது.   னிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த கோரிக்கையை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

10% இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த,இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான  மாணவர்கள் சேர்க்கையில்  ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் கூட்டாக  சுமார் 6,700 இடங்களை அதிகரிக்க வேண்டும். இதில், ஏறக்குறைய 2,300 இடங்கள்( பி.டெக் படிப்பில் 500 இடங்கள்) 2019-20 இல் சேர்க்கப்பட்டன. மீதமுள்ள 4,400 இடங்கள் பிடெக்-படிப்பிற்கு 1,300 இடங்கள்) இந்த ஆண்டு சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

காலவரம்பு நீட்டிப்பு தொடர்பான கோரிக்கையை முதலில் ஐஐடி நிறுவனங்கள் எழுப்பியிருந்தாலும்,என்.ஐ. டி கல்வி நிறுவனங்களும் இதேபோன்ற உள்கட்டமைப்பு சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஐஐடி,என்ஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐஎஸ்இஆர், ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் நிதயுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த, அடுத்த இரண்டு ஆண்டுகளில்  மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும்  (அதாவது, கிட்டத்தட்ட 2 லட்சம் கூடுதல் இடங்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஐஐடி நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான 20% பிரத்தியோக இடங்கள், உயர் வகுப்பினருக்கான் 10% இடஒதுக்கீடு போன்றவைகள் மூலம் இந்த ஆண்டு கூடுதல் சேர்க்கை எதிர்பார்க்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தங்கள் வகுப்பறை மற்றும் விடுதிகளை புதுபித்துக் கொண்டிருந்தன. ஆனால், கொரோனா பொது முடக்கநிலை காரணமாக பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது . கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் போது இந்த பணிகளை முடிக்க வாய்ப்பில்லை      ”என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment