யூ.பி.எஸ்.சி (UPSC) முதல்நிலைத் தேர்வுக்கான முன்பதிவு கடந்த பிப்ரவரி 19-ம் தேதியிலிருந்து தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழில் உள்ளபடி தங்களது பெயர்களைக் குறிப்பிட வேண்டுமென யூ.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
அதே பெயர் தான் முதல்நிலைத் தேர்வின் ஹால் டிக்கெட்டிலும் பதிவு செய்யப்படும். அதோடு சேர்ந்து புகைப்படத்துடன் கூடிய அரசாங்க அடையாள அட்டையையும் ஸ்கேன் செய்து இணைக்கும் படியும் யூ.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்வெழுத வரும் போது ஹால் டிக்கெட் மற்றும், அடையாள அட்டையை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கு மார்ச் 18-ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு ஜூன் 2, 2019-ல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.