RRB Group D Result 2019 Likely to Declare Today: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்திய, குரூப் டி தேர்வுக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.பி புவனேஷ்வரைச் சேர்ந்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “தேர்தல் ஆணையத்தின் மாதிரி குறியீடு வெளியிட இருப்பதால், இனியும் ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகளை காலம் தாழ்த்த முடியாது. அதனால் இதன் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 27-ம் தேதி நள்ளிரவு அல்லது 28-ம் தேதி காலை வெளியிடப்படும்” என்றார்.
அந்தந்த மண்டலத்தை சேர்ந்த இணைய தள முகவரியில், ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
62,907 காலியிடங்களை பூர்த்தி செய்ய நடத்தப்பட்ட இத்தேர்வில் 1.8 கோடி பேர் கலந்துக் கொண்டனர்.
தவிர, ஆர்.ஆர்.பி குரூப் டி, என்.டி.பி.சி ஆட்சேர்ப்பு தேர்வுக்கான அறிவிப்பும் பிப்ரவரி 28-ம் தேதியான நாளை ஆர்.ஆர்.பி இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவது கூடுதல் தகவல்.