Advertisment

ஜே.இ.இ ரிசல்ட் வெளியீடு; டாப் ரேங்க் யார், யார்?

ஜேஇஇ மெயின் தேர்வு 2-ல் மொதம் 43 மாணவர்கள் ஒட்டுமொத்த தகுதிப் பட்டியலில் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jee Main

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜேஇஇ மெயின் தேர்வு 2 முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) அதிகாலையில் வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் jeemain.nta.nic.in மற்றும் ntaresults.nic.in. ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜேஇஇ மெயின் தேர்வு 2-ல் மொதம் 43 மாணவர்கள் ஒட்டுமொத்த தகுதிப் பட்டியலில் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் (சீசன் 1 மற்றும் சீசன் 2 செயல்திறன் அடிப்படையில்). இதில் கர்நாடகாவைச் சேர்ந்த ரித்தி கமலேஷ் குமார் மகேஸ்வரி என்ற ஒரு பெண் மட்டும் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 24 அன்று வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் 10 கேள்விகளை என்.டி.ஏ ரத்து செய்தது. இந்த ரத்து செய்யப்ட்ட கேள்விகளுக்கு, குறிப்பிட்ட தேதியில் தேர்வு எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று என்டிஏ அறிவித்துள்ளர். ஐஐடி ஜேஇஇ (IIT JEE)  மேம்பட்ட 2023 பதிவு ஏப்ரல் 30, 2023 அன்று தொடங்கும். தற்போதைய தேர்வில் வெற்றி பெற்றவர்கள் JEE Advanced அதிகாரப்பூர்வ தளமான jeeadv.ac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, குவஹாத்தி ஏற்கனவே OCI/ NRI விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. JEE முதன்மை 2023 முடிவுகள் நேரலை: 94.83% மாணவர்கள் அமர்வு 2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 9,31,334 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 8,83,367 பேர் தேர்வு எழுதினர்.

இரண்டாவது அமர்வில் மொத்தம் 94.83 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். இதில் அமர்வு 1 தேர்வுகளில், 95.8 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாக என்டிஏ அறிவித்துள்ளர். இதனிடையே "டெல்லி அரசுப் பள்ளி மாணவர் அஸ்தீக் நாராயண் ஜேஇஇ மெயின் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். ஆஸ்தீக் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.

அகமதாபாத் சிறுவன் கௌஷல் விஜய் ஜேஇஇ மெயின் தேர்வில் 2023 (JEE Main 2023) இன் இரண்டு அமர்வுகளிலும் முதலிடம் பிடித்தார். மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) கணினி அறிவியல் பொறியியல் படிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஐஐடி கான்பூரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பிடெக் முடித்து, தற்போது ஐஐடி டெல்லியில் எம்டெக் படித்து வரும் அவரது சகோதரர்தான் அவருக்கு மிகப்பெரிய உத்வேகம் என்றும் கூறியுள்ளார்.  

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசிக்கும் மிருணாள் ஸ்ரீகாந்த், 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்று, ஜேஇஇ மெயின் ஏப்ரலில் 100 சதவீத மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.  மிருணாள் 10ம் வகுப்பில் 98.4 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஜேஇஇ மெயின் ஜனவரி 2023 அமர்விலும் மிருணாள் சிறப்பாக செயல்பட்டு, 99.96 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார்.  அதேபோல் NTSE, RMO & Chemistry Olympiad (INCHO) ஆகியவற்றிலும் தகுதி பெற்றவர். 

முதல் JEE மெயின் மற்றும் இப்போது அட்வான்ஸ்டுக்கான தேர்வுக்கு தயாராகும்போது போது, ​​நான் ஆலன் (ALLEN) மற்றும் படிப்புப் பாடங்களில் உள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறேன் என்றும் முக்கியமாக JEE மெயினுக்கான NCERT பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துகிறேன் என்றும் மிருணாள் கூறினார். 

உத்தரபிரதேசத்தில் வசிப்பவர், மலாய் கேடியா காஜியாபாத்தில் உள்ள தனது பள்ளி மற்றும் அவரது பயிற்சிகளில் வழக்கமான வகுப்புகளுக்குச் செல்லும் போது இந்த தேர்வுக்குத் தயாரானார். “மார்ச் 2020 இன் ஆரம்ப நாட்களில் நான் கோட்டாவில் படிக்கச் சென்றேன், சில வாரங்களுக்குப் பிறகு, கோவிட்-19 காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்டது. அப்போது என் குடும்பத்திலிருந்து விலகி வாழ்வது மற்றும் தொற்றுநோய்க்கு இடையில் எனது படிப்பை தொடர்வது போன்ற மனச்சோர்வடைந்த அனுபவத்தை என்னால் கையாள முடியவில்லை.

கோட்டாவில் வாழ்வது ஒரு வலுவான சோதனையாக இருந்தது, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் எனது வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தேன் என்று மலாய் கேடியா பகிர்ந்து கொண்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment