Advertisment

ஜூலை 23, 24-ல் சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: மருத்துவம் படிக்க குவியும் மாணவர்கள்

கோவையில் ஜூலை 26-ம் தேதியும், மதுரையில் ஜூலை 28-ம் தேதியும், திருச்சியில் ஜூலை 29-ம் தேதியும் ரஷ்யக் கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

author-image
Janani Nagarajan
New Update
ஜூலை 23, 24-ல் சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி: மருத்துவம் படிக்க குவியும் மாணவர்கள்

ரஷ்ய பல்கலைக்கழகத்திற்கு குவியும் இந்திய மாணவர்கள் (Express Photo)

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் மற்றும் உக்ரைன்-ரஷ்யாவிற்கு இடையேயான போரின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். 

Advertisment

இதனால் சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகள் மருத்துவப் படிப்பிற்கான உகந்த இடம் இல்லை என உலகமக்களினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் 2022-23 ஆண்டின் மருத்துவ துறையின் அட்மிஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 5,000 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, இனி வரும் காலங்களில் 50% ஆக அதிகரித்து 2022-23இல் 7,500 ஆக உயர்த்த ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கு காரணம், ரஷ்யா பல்கலைக்கழங்களுக்கு இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இனிவரும் காலங்களில் தேவைப்படும் என கூறப்படுகிறது.

"வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் இன்பே தேசிய ஆராய்ச்சி அணுக்கரு பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் முந்தைய ஆண்டை விட 100% தங்களின் மாணவர்களின் உட்கொள்ளலை அதிகரித்துள்ளன. மற்ற பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு ஆண்டிற்கு தங்கள் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, ”என்று கல்வி ஆலோசகர்களின் நிர்வாக இயக்குனர் சி ரவிச்சந்திரன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ரஷ்யா பல்கலைக்கழகங்களில் படித்துவரும் 3.16 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 22,000 பேர் இந்திய மாணவர்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கின்றனர். ரஷ்ய கல்வி கண்காட்சி சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

"2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1,300 மாணவர்கள் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளனர். இந்த ஆண்டு அதிக மாணவர்களை எதிர்பார்க்கிறோம்" என்று சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரக அதிகாரி லகுடின் செர்ஜி அலெக்ஸீவிச் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆங்கில வழியில் மருத்துவம் படிக்க, ஒரு மாணவர் (பல்கலைக்கழகத்தைப் பொறுத்து) ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும். உயர் கல்விக்கான செலவு ஒப்பீட்டளவில் மலிவானது, ஏனெனில் இது ரஷ்ய அரசாங்கத்தால் அதிக மானியம் பெறுகிறது," என்று அவர் கூறினார்.

உக்ரைனுடன் போர் நடந்தாலும் ரஷ்யாவிற்குள் அமைதியான சூழ்நிலை நிலவுவதாக ரஷ்ய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

“தற்போதைய அரசியல் சூழ்நிலை இருந்தபோதிலும், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நிம்மதியாகப் படித்து வருகின்றனர். விலைகளில் சிறிய மாற்றங்கள் உள்ளது, ஆனால் வேறு எதுவும் மாறவில்லை, ”என்று கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தின் மாணவர் திமூர் ரஸ்டெமோவிச் அக்மெடோவ் கூறினார்.

இருப்பினும், ரஷ்யாவில் இந்திய கார்டுகள் வேலை செய்யாததால் பணப்பரிமாற்றம் போன்ற பிற சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.

“பணப் பரிமாற்றச் சிக்கலைத் தீர்க்க (ஸ்பேர்) வங்கி டெல்லியில் ஒரு பிரத்யேக கிளையைத் திறந்தது. மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை ரூபாய்-ரூபிள் ஆக மாற்ற முடியும். வாழ்வாதாரச் செலவுகளுக்காக, யூனியன் பே முறையைப் பயன்படுத்தும் வங்கிகளுடன் இணைக்க முயற்சிக்கிறோம், எனவே மாணவர்கள் ரஷ்யாவில் இறங்கும் போது ரூபிள்களில் பணத்தை எடுக்க முடியும். கல்வியாண்டு தொடங்கும் முன் கிடைக்கும்,'' என்றார் ரவிச்சந்திரன்.

உக்ரைனில் படிப்பை முடிக்க முடியாத இந்திய மாணவர்கள் ரஷ்ய அரசாங்கத்தின் ஆணைக்கு இணங்க ரஷ்யாவில் அதை மீண்டும் தொடரலாம். கண்காட்சியின் போது மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இருந்து இது குறித்து தெளிவுபடுத்துவோம், என்றார்.

கோவையில் ஜூலை 26-ம் தேதியும், மதுரையில் ஜூலை 28-ம் தேதியும், திருச்சியில் ஜூலை 29-ம் தேதியும் ரஷ்யக் கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் மாணவர்களின் கட்டண விவரம், சேர்க்கை தேவைகள் மற்றும் பிற சந்தேகங்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Educational News International News Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment