Advertisment

பொறியியல் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பச் செயல்முறை ஜூன் 20 ஆம் தேதி தொடக்கம்

author-image
WebDesk
New Update
TNEA கவுன்சிலிங்; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்க… இப்படி செய்யுங்க!

Minister Ponmudi announced Engineering counselling dates: பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசுக் கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்புகளில் காலியிடங்களைத் தவிர்க்க இந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

பின்னர், அதன் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்

2022 -23 பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 20-06-2022.

ஆன்லைனில் விண்ணப்பிக்க / படிவங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 19-07-2022.

ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள் : 22-07-2022.

சான்றிதழ் சரிபார்ப்பு : 20-07-2022 முதல் 31-07-2022 வரை.

தரவரிசை பட்டியல் வெளியீடு : 08-08-2022

சிறப்பு கலந்தாய்வு ( மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினரின் வாரிசுகளுக்குகான கலந்தாய்வு) :16-08-2022 முதல் 18-08-2022.

பொது கலந்தாய்வு : 22-08-2022 முதல் 14-10-2022 வரை.

துணை கலந்தாய்வு : 15-10-2022 முதல் 16-10-2022 வரை.

SC மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு : 17-10-2022 முதல் 18-10-2022 வரை.

அக்டோபர் 18 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு முடிவடைகிறது.

இதையும் படியுங்கள்: பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி இலவச ஆன்லைன் கோர்ஸ்: போட்டித் தேர்வுகளுக்கு உதவும் திட்டம்

மாணவர்கள் அவர்களாகவே விண்ணப்பிக்கலாம், அல்லது அவர்கள் படித்த பள்ளிகளின் மூலமும் விண்ணப்பிக்கலாம். முதல் வாரத்திற்குள் 15,000 பேருக்கு கலந்தாய்வு நடைபெறும். இரண்டு மாதத்தில் கலந்தாய்வு நடைபெற்று வரும் முடிவுகள் வெளிவரும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இந்த வருடமும் சென்ற ஆண்டு வசூலித்த கட்டணம் தான் வசூலிக்கப்படும், என்று அமைச்சர் கூறினார்.

பின்னர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தவுடன், 27-6-22 முதல் விண்ணப்பம் தொடங்கி, 15-7-22 வரை நடைபெறும் என்றும், தொடர்ந்து 25 ஜூலை முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment