Advertisment

NEET Exam Analysis; இயற்பியல், வேதியியல் கடினம்; தமிழக மாணவர்கள் கருத்து

நீட் தேர்வு ஓட்டுமொத்தமாக சற்று எளிதாக இருந்தது; அதேநேரம் இயற்பியல், வேதியியல் பகுதிகள் கடினமாக இருந்ததாக தமிழக மாணவர்கள் கருத்து

author-image
WebDesk
New Update
புதன்கிழமை நீட் ரிசல்ட்: செக் செய்வது எப்படி?

NEET Exam 2022 Analysis; Physics and Chemistry tough to Tamilnadu students: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று (ஜூலை 17) நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்தமாக தேர்வு எளிமையானதாக இருந்தாலும், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவு வினாக்கள் விடையளிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

தேசிய தேர்வு முகமை (NTA) இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த ஆண்டு, மருத்துவ நுழைவுத் தேர்வு இந்தியாவில் கிட்டத்தட்ட 543 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்: நீதிமன்ற வேலைவாய்ப்பு; 124 பணியிடங்கள்; 8th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. மாணவர்கள் வசதிக்காக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனிடையே தேர்வில் 95% மாணவர்கள் கலந்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவு வினாக்கள் விடையளிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். நீட் தேர்வில் உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகள் உள்ளது.

தமிழகத்தில் இருந்து, தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள், இயற்பியல் பிரிவு மிகவும் கடினமானது என்றும், நேரமின்மை காரணமாக பாதி கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் விட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வினாத்தாள் கடினமாக இருந்தது. இயற்பியலில் கணக்கியல் சார்ந்த வினாக்கள் மிக நீளமாக இருந்தன. இதனால் இயற்பியலில் அதிக வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல், மதிப்பெண்களைப் பெற மற்ற பிரிவுகளில் கவனம் வேண்டியிருந்தது. ஒரு வினாவை ஒரு நிமிடத்தில் தீர்க்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் இயற்பியல் கேள்விகளுக்கு அதைவிட அதிகமாக நேரம் தேவைப்பட்டது, என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் பொருத்துக மற்றும் கூற்று - காரணம் என சிக்கலைத் தீர்த்தல் போன்ற வகைகளில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பகுதி மிகவும் எளிதாக இருந்தது. அதேநேரம், வேதியியல் பகுதி ஆவரேஜ் ஆக இருந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், உயிரியல் பகுதியில் பெரும்பாலும் பாடப் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால் வேதியியல் மற்றும் இயற்பியல் பிரிவுகளில் கணக்கியல் மற்றும் கருத்தியல் கேள்விகள் இருந்தன. இயற்பியல் பிரிவில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீத கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. கடந்த ஆண்டு, இது சுமார் 30 சதவீதமாக இருந்தது. இது கட் ஆஃப் மதிப்பெண்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடையே உற்சாகத்தை குறைத்துவிட்டது. சிக்கலைத் தீர்க்கும் கேள்விகள் ஆஃப்லைனில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடங்களை ஆன்லைனில் கற்பிப்பது மிகவும் கடினம் என்று பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment