Advertisment

மன அழுத்தத்தில் 587 நீட் தேர்வர்கள்: தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 பேர் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மற்றும் தோல்வியடையும் மாணவர்களின் மனநிலையை கண்காணிக்க 104 உதவி எண் மற்றும் அதில் 110 மனநல ஆலோசகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் 32% மாணவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
மன அழுத்தத்தில் 587 நீட் தேர்வர்கள்: தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

நீட் தேர்வு எழுதிய 32 % மாணவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 988 பேர் நீட் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மற்றும் தோல்வியடையும் மாணவர்களின் மனநிலையை கண்காணிக்க 104 உதவி எண் மற்றும் அதில் 110 மனநல ஆலோசகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் 32% மாணவர்களை  தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள்து கைபேசி எண்கள் தொடர்புகொள்ள முடியாத நிலை நிலவுகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில் “ 1,45,988 மாணவர்களில் 587 மாணவர்கள் மிகவும் மன முறிவுடன் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் 587 மாணவர்களில் 98 மாணவர்களை கூடுதலான மன அழுத்ததில் இருப்பதால் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தற்கொலைகளை தடுக்க சுகதாரத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களிடமும் இதுதொடர்பாக பேசியுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment