Advertisment

Postal Jobs: தபால் துறை வேலைவாய்ப்பு; 10 வது தேர்ச்சி; 50 வயது வரை உள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

Post office jobs insurance agents 10th pass age up to 50 years can apply : சென்னையில், அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டு பிரிவில் நேரடி முகவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 50 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
post office schemes

தமிழ் நாட்டில் தபால் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான (Postal Life Insurance) நேரடி முகவர்கள் (Direct Agents) பணிகளுக்கு அறிவிப்பு வெளி வந்துள்ளது.

Advertisment

சென்னையில், அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டு பிரிவில் நேரடி முகவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 50 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி: 18 முதல் 50 வயதிற்குட்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்புக்கு சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ளவர்கள், தங்கள் விண்ணப்பங்களை (Bio-Data) (அலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் இதர விவரங்களுடன்) “முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.08.2021.

பணிபுரியும் இடங்கள்

தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சென்னை நகர வடக்கு கோட்டத்தின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், போர்ட் செயின்ட் ஜார்ஜ், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ஷெனாய் நகர், அமைந்தகரை, சேத்துப்பட்டு, ஐ.சி.எஃப், வியாசர்பாடி, அண்ணா நகர், தண்டையார்பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர் நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பணி புரியலாம்.

மேலும் விவரங்களுக்கு,

முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம்,

சென்னை நகர வடக்கு கோட்டம்,

சென்னை - 600 008.

தொலைபேசி எண் :044- 2827 3637;

மின்னஞ்சல் முகவரி: sreeanrindiapost@gmail.com ஆகியவற்றை அணுகவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Post Office
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment