Advertisment

விரைவில் நீட் தேர்வு முடிவுகள்… கவுன்சிலிங் தேர்ச்சி விகிதம் தெரிஞ்சுக்கோங்க!

நீட் பேஸ் 2 பதிவை ரெஜிஸ்டர் செய்யாதோர்களின், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
s.anoj anoj
New Update
விரைவில் நீட் தேர்வு முடிவுகள்… கவுன்சிலிங் தேர்ச்சி விகிதம் தெரிஞ்சுக்கோங்க!

நீட் 2021 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு, அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு விண்ணப்பப் படிவத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 26 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Advertisment

பெரும்பாலும், தீபாவளிக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என்பது திட்டவட்டமாக தெரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேர்வு நடந்த ஒரு மாதத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால், இம்முறை கால தாமதம் ஆகுவதாக கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆன்சர் கீ அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. மாணவர்கள் அதனை உபயோகித்து உத்தேச மார்க்க கணக்கிட்டு கவுன்சிலிங்கில் எந்த கல்லூரி கிடைக்கும் என்பதை கண்டறிய முடியும்.

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் நீட் 2021 கட்-ஆஃப் சதவிகிதம் மற்றும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகளுடன் கட்-ஆஃப் அறிவிக்கப்படும். பொது பிரிவினருக்கான கட்ஆஃப் மார்க் 50 சதவிகிதம் ஆகும். விண்ணப்பத்தாரர்கள் என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்தில் neet.nta.nic.in தேர்வு முடிவை காணலாம்.

மேலும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினர் குறைந்தப்பட்சம் 40 சதவிகிதம் கட்ஆஃப் பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வு முடிவுகளுடன், அகில இந்திய தரவரிசை பட்டியலும் என்டிஏ வெளியீடும்.

15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிகாரிகள் நடத்தும் நீட் கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை அறிய tnmedicalselection.net இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

டை பிரேக்கிங் ஃபார்முலா(Tie Breaking Formula)

மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது. முதன்முறையாக, இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது ஒரு காரணியாக கருதப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களது மார்க்கை முடிவு செய்ய டை பிரேக்கிங் ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது. உயிரியலில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அப்போதும், டை நீடித்ததால், அடுத்ததால் வேதியியலில் அதிக மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மார்க் டையாகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவில் தவறான விடைகளை எழுதியவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

குறிப்பு: நீட் பேஸ் 2 பதிவை ரெஜிஸ்டர் செய்யாதோர்களின், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment