Central Government Job opportunity :மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் செப்டம்பர் 15- கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலி இடங்கள் – 36
உதவியாளர் – 09
விற்பனையானர் – 5
எழுத்தாளர் (க்ளார்க்) – 5
ஷோரூம் மேலாளர் – 4
இளநிலை சுருக்கெழுத்தாளது – 4
பயிற்சி உதவியாளர் – 3
சீனியர் சைன்டிபிக் ஆபிசர் – 2
சைன்டிபிக் அசிஸ்டன்ட் -1
மிஷின் ஆப்பரேட்டர் -1
இந்தி டைப்பிஸ்ட் – 1
தகுதிகள் :
இதில் சைன்டிபிக் ஆபிசர் பணிகளுக்கு பொறியியல் பட்டம் பெற்று 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலாளர் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் மற்றும் கிளார்க் பணிகளுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் 18 வயது முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சில பணிகளுக்கு வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பணியாளர்கள் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக்கட்டணம்:
பதவிகளை பொருத்து விண்ணப்பக்கட்டணம் ரூ.500, ரூ.400, ரூ.300 என மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு http://coirboard.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு : http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil