Advertisment

அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Half yearly exams : தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம்  நடைபெறும் என்ற தகவல்கள் தவறானது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம்  நடைபெறும் என்ற தகவல்கள் தவறானது என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைனில் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது" என்று கூறினார்.

மேலும், பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வரும் திங்கட்கிழமை அறிக்கை அளிக்கப்பட்டு, ஐந்து நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 1,0 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து அடுத்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Tamilnadu K A Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment