Advertisment

TNPSC Group 4 Results: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட்; புதிய இட ஒதுக்கீடு முறையில் உத்தேச கட் ஆஃப் எவ்வளவு?

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த குருப் 4 தேர்வு முடிவுகள் அமைய உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4 Results: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட்; புதிய இட ஒதுக்கீடு முறையில் உத்தேச கட் ஆஃப் எவ்வளவு?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில், புதிய இடஓதுக்கீடு மற்றும் உத்தேச கட் ஆஃப் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை ஜனவரி 2023ல் தான் தேர்வாணையம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஜனவரி இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், சில நாட்களில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் தான் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி தொடங்கி முதல் வாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் ரிசல்ட் எப்போது வரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையெ தற்போது குரூப் 4 தேர்வு முடிவுகள் இடஒதுக்கீடு மற்றும் உத்தேச கட் ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பான தகவலகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த குருப் 4 தேர்வு முடிவுகள் அமைய உள்ளது. பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடுடன் வெளியாக உள்ள இந்த தேர்வு முடிவில் பொது பிரிவிலும் பெண்களுக்கான இடம் கிடைக்கும். இதனால் பெண்கள் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தோராயமாக சுமார் 5 மதிப்பெண்கள் வித்தியாசம் இருக்க வாய்ப்புள்ளது.

இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 154 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 152 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம் பிரிவினருக்கு 150 மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் 147 மதிப்பெண்களும், பழங்குடியினருக்கு 144 மதிப்பெண்களும் கட் ஆப் இருக்க வாய்ப்புள்ளது. இதில் பெண்கள் இந்த மதிப்பெண்களை விட 5 அல்லது 6 மதிப்பெண்கள் குறைவாக எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கூடுதல் காலியிடங்கள் இருப்பதால் இந்த கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. பிப்ரவரி இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு இருக்கும். அதன்பின்னர் நீங்கள் உங்களது பணியிடங்களை தேர்வு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்காக சுமார் 20500 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment