தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என இன்று(மே.15) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் கொண்ட இந்தத் தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், முதல் தாள் தேர்வு வரும் ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் காலை 10 முதல் 1 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து கூடுதல் தகவல்களை http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.