TET Exam 2019: நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கான டெட் தேர்வை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நடத்தி வருகிறது.
அந்த வகையில் இவ்வருடம் நடக்கும் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. மார்ச் 15 தொடங்கி ஏப்ரல் 12 வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் தற்போது விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
இது முடிந்த பின்னர் இம்மாத இறுதியில் தேர்வுத் தேதி மற்றும் காலி பணியிடம் குறித்த விபரங்கள் வெளியிடப்படும்.
இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 5,90,000 பேர் விண்ணப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.