கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளில் கலந்தாய்வின் மூலம் ஒதுக்கீட்டைப் பெற்ற மாணவர்கள், பின்னர் அதனை நிராகரித்து விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் பிரச்சினையைப் போக்கும் வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் திருப்திகரமாக இருந்தால், 7 நாட்களுக்குள் ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும். மேலும், இந்த குறிப்பிட்ட கல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.
மேலும், அந்த மாணாக்கர்கள் அடுத்த கலந்தாய்வு சுற்றுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோன்று, ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் திருப்தி அடையாத மாணாக்கர்கள் , மேல் நோக்கிய நகர்தலுக்காக (Upward Movement) காத்திருக்கலாம் (அல்லது) கலந்தாய்வில் இருந்து வெளியேறலாம்.
இது தொடர்பான முழு விவரங்களை கல்வியாளர் ஜெயப் பிரகாஷ் காந்தி அளிக்கிறார்.
2022-23 கல்வியாண்டிற்கான பொறியியல் (B.E/Btech) பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் ஜுலை 26ம் தேதி வரை பெறப்பட்டன. 2,07,361 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதில் 1,62,492 விண்ணப்பங்களுக்கு விண்ணப்ப கட்டணமும், 1,49,369 விண்ணப்பங்களுக்கு சான்றிதழ்கள் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“