Advertisment

310 பொறியியல் கல்லூரிகளில் என்ன பிரச்னை? மாணவர் சேர்க்கை பாதிக்குமா?

310 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணா பல்கலைக்கழகம்; காரணம் என்ன? மாணவர் சேர்க்கை பாதிக்குமா?

author-image
WebDesk
New Update
310 பொறியியல் கல்லூரிகளில் என்ன பிரச்னை? மாணவர் சேர்க்கை பாதிக்குமா?

TNEA 2022 Engineering counselling 310 colleges Anna University affiliation issue: போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்தில் உள்ள 310 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

இது பொறியியல் படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த கல்லூரிகள் எவை? அவற்றில் சேரலாமா? அவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வருகிறதா? என மாணவர்கள் கவலைக் கொண்டுள்ளனர்.

அதேநேரம், இந்த மாதிரியான நோட்டீஸ் என்பது பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெறும் வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில், இந்த விஷயம் செய்தியாக வெளியிடப்பட்டது, மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதல்களை கல்லூரிகள் பின்பற்ற உள்ளதால், இதில் எந்த சிக்கல்களும் இல்லை என கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பொறியியல் கல்லூரிகள் ரேங்கிங்: அண்ணா பல்கலை. செய்தது சரியா?

இது குறித்து கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, அகில இந்திய தொழில்நுட்ப கழகம் ஒவ்வொரு வருடமும், கல்லூரிகளை அங்கீகரிக்க வேண்டும். போதுமான உள் கட்டமைப்பு வசதிகள், தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வக வசதி உள்ளிட்டவற்றை பொறுத்து அகில இந்திய தொழில்நுட்ப கழகம் கல்லூரிகளை அங்கீகரிக்கும்.

அதேபோல், பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களும், இதேபோன்ற அளவுகோல்கள் மற்றும் கூடுதலான சில அளவுகோல்களுடன் கல்லூரிகளை ஆய்வு செய்யும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதால், அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்யும்.

கொரோனா காரணமாக, கடந்த 2 வருடங்களாக நேரடி ஆய்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நேரடி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 310 கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை என கண்டறியப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 476 கல்லூரிகளில் 166 கல்லூரிகளில் 25%க்கும் குறைவாக குறைபாடுகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. இந்த கல்லூரிகளுக்கு அனுமதி தானாகவே வழங்கப்படும்.

65 கல்லூரிகளில் 25-50% குறைபாடுகள் உள்ளன. அதேநேரம், 225 கல்லூரிகளில் 50%க்கும் அதிகமாக குறைபாடுகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை அந்த கல்லூரிகள் 2 வாரங்களுக்குள் சரி செய்துவிடும் என நம்பப்படுகிறது. அவை சரி செய்யப்பட்ட உடன் அண்ணா பல்கலைக்கழகம் அந்த கல்லூரிகளை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும். எனவே இந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்கப்படும். அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படாது. கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இந்தக் கல்லூரிகள் நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்து, கலந்தாய்வில் பங்கேற்கும் என நம்பப்படுகிறது. எனவே மாணவர்கள் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. கலந்தாய்வில் பட்டியலிடப்பட்டுள்ள கல்லூரிகளை மாணவர்கள் தைரியமாக தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு ரமேஷ்பிரபா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment