Advertisment

TNPSC Group 4: இந்த காரணத்தால் கட் ஆஃப் குறையும்... ரிசல்ட் தேதி எப்போது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 2: தாமதத்திற்கு 2 காரணம்... குரூப் 2 ரிசல்ட் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்

TNPSC Group 4 exam cut off details and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான உத்தேச விடை குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்களையும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதனையும் இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கிட்டத்தட்ட 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தமிழக சுற்றுலாத் துறை வேலைவாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. தேர்வர்கள் அந்த விடைகளை சரிபார்த்து, தங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என தெரிந்துக்கொண்டனர். இதேபோல் நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.

கடந்த குரூப் 4 தேர்வுகளின்போது, முதலில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட நிரப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, இந்த ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாமல் உள்ளதாலும், மேலும் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நிச்சயமாக இந்த ஆண்டு காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என குரூப் தேர்வுகளை ஆராய்ந்து வரும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் கடந்த முறை தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட எடுத்துக் கொண்ட கால அளவைக் கணக்கிடும்போது, அக்டோபர் 2 ஆவது வாரத்திலேயே முடிவுகள் வெளியாகலாம் என தெரிகிறது.

கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 162 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 146க்கு மேலும், SCA பிரிவினருக்கு 144க்கு மேலும், ST பிரிவினருக்கு 137 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம். அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.

இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment