Advertisment

TNPSC Group 4: என்னென்ன பதவிகள்… யார், யார் விண்ணப்பிக்கலாம்?

குரூப்-4 தேர்வில் இம்முறை தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
TNPSC Recruitment; தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2A நடைபெறாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என TNPSC தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

குரூப்-4 பிரிவில் மொத்தம் 5,244 காலிப்பணியங்கள் இருப்பதாகவும், இம்முறை தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தேர்வு

தமிழக அரசு வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கான எளிய வழி இந்த குரூப் 4 தேர்வு. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். அதுவும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. எழுத்து தேர்வு கொள்குறி வகை அடிப்படையிலானது. விரிவான எழுதுதல் தேர்வு கிடையாது. சுமார் 5 ஆயிரம் பணியிடங்களுக்காக நடைபெறும் இந்த தேர்வில் கடுமையான போட்டி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுவார்கள்.

என்னென்ன பதவிகள்?

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை,

இளநிலை உதவியாளர் (Junior Assistant)

தட்டச்சர் (Typist)

சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)

கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)

வரித் தண்டலர் (Bill Collector)

நில அளவர் (Field Surveyor)

வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி

இத்தேர்விற்க்கான வயது தகுதி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறாததால், இம்முறை வழக்கத்தை விட அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment