Advertisment

TNPSC Group 4 Results: குரூப் 4 தேர்வு முடிஞ்சு 6 மாசம் ஆச்சு; 14 லட்சம் பேர் காத்திருப்பு; ரிசல்ட் எப்போது?

TNPSC Group 4: குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group-4 exam results will be released in March

குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது.

2023 பிப்ரவரி மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில், தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி 14 லட்சம் தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: TNPSC CESSE 2023; தமிழ்நாடு அரசில் 1083 காலியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை ஜனவரி 2023ல் தான் தேர்வாணையம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஜனவரி இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், சில நாட்களில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் தான் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையில், 2023க்கான ஆண்டு திட்டத்தில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஆண்டின் இறுதியில் நடைபெறும் என்றும், தேர்வு 2024ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் குரூப் 2 தேர்வும் இல்லை என்று இருந்தது. இதனால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் குரூப் 4 தேர்வை 2023க்குள்ளாகவே நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில், குருப் 4 தேர்வுக்கான காலியிடங்களில் 2500 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காலியிடங்களின் அதிகரிப்பு காரணமாக கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்றுக் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவுகளை நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment