தமிழகத்தில் காலியாக உள்ள உதவி அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உதவி அரசு வழக்கறிஞர் நிலை-2 பதவிக்கான 46 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.இந்த பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவுசெய்த உறுப்பினராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் பி.எல். பட்டப்படிப்பு சான்றிதழ், பார் கவுன்சில் உறுப்பினர், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
பதிவுக் கட்டணம் ரூ.150, முதல் நிலைத் தேர்வுக் கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வுக் கட்டணம் ரூ.200 ஆகும். 31.10.2018. முதல் நிலைத் தேர்வு நாள்: 05.01.2019. முதன்மைத் தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/pDTT4S இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.