Advertisment

ZOHO Jobs; மதுரை ஜோஹோ நிறுவனத்தில் 1300 பணியிடங்கள்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மதுரை ஜோஹோ நிறுவன வேலை வாய்ப்பு; 1300 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
zoho

ஜோஹோ நிறுவன வேலை வாய்ப்பு

இந்திய மென்பொருள் சேவை நிறுவனமான ஜோஹோ (Zoho), மதுரை கப்பலூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனது புதிய அலுவலகத்தில் சுமார் 1,300 ஊழியர்களை பணியமர்த்த உள்ளது. தகுதியுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய மென்பொருள் சேவை நிறுவனமான ஜோஹோ (Zoho), மதுரை கப்பலூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய அலுவலகத்தை அமைத்து வருகிறது. இதற்காக மென்பொறியாளர்கள், நிர்வாகம் சார்ந்த பணியாளர்கள் என மொத்தம் 1300 பேரை பணியமர்த்த உள்ளது. எனவே இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் ஜோஹோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதனிடையே, ஜோஹா நிறுவனம் பணியமர்த்துவதைக் குறைத்தாலும், நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சித் திட்டம் கிராமப்புறம் என்று ஸ்ரீதர் வேம்பு வியாழக்கிழமை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"எங்கள் கிராமப்புற விரிவாக்கம் தொடர்கிறது, இப்போது மதுரையில் உள்ள கப்பலூரில்... நாங்கள் மிகவும் மெதுவாக வளர்ந்து வருவதால் நாங்கள் பணியமர்த்தலை வெகுவாகக் குறைத்துள்ளோம், ஆனால் எங்கள் நீண்ட கால வளர்ச்சித் திட்டம் கிராமப்புறமாக உள்ளது, அதற்கான வசதிகளை நாங்கள் தயார் செய்கிறோம்," என்று அவர் பதிவிட்டார்.

நவம்பர் 2019 இல், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தார், இந்த மாற்றம் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் தனது கிராமப்புற மறுமலர்ச்சி முயற்சிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஜோஹோ நிறுவனம் தென்காசியில் அதன் இருப்பின் சமூக-பொருளாதார தாக்கத்தை ஆய்வு செய்ய Economix கன்சல்டிங் குழுவை நியமித்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2011 இல் திறக்கப்பட்ட அதன் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கிட்டத்தட்ட 300 பங்குதாரர்களுடன் 7,300 நிமிட உரையாடல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment