Advertisment

சாதாரண ஒருவனின் கோபம் தான் இந்த படம்... சினம் குறித்து அருண் விஜய்

சினம் பலமானது. எல்லார் குடும்பம் இருக்கின்ற ஒரு கோபம் தான் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம் அதை கதை கருவாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சாதாரண ஒருவனின் கோபம் தான் இந்த படம்... சினம் குறித்து அருண் விஜய்

பி.ரஹ்மான் கோவை

Advertisment

எனது திரைப்பட பிரமோஷன்களை கோவையில் தான் முதலில் தொடங்குவது எனக்கு மகிழ்ச்சி என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

இந்த படங்களின் வெற்றி காரணமாக அருண்விஜய் நடித்து கிளப்பில் போடப்பட்டுள்ள சில திரைப்படங்களில் தற்போது தூசிதட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜி.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள சினம் படம் வரும் செப்டம்பர் 16-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் தற்போது அருண்விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  

அந்த வகையில் கோவையில் உள்ள கேஜி திரையரங்கில் சினம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில். அதற்காக முன்னோட்ட காட்சி திரையிடப்பட்டது இதில் நடிகர் அருண் விஜய் நடிகை பல்லக் லால்வாணி கலந்துகொண்டனர். தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து சினம் திரைப்படம் பற்றி உரையாடிய அருண்விஜய் தொடர்ந்து ரசிகர்களுடன்  புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண்விஜய், யானை  பட வெற்றிக்கு பிறகு சினம் மூலமாக ரசிகர்களையும் பொதுமக்களையும் சந்திக்கிறேன். யானைக்கு  கோவையில் இருந்து தான் பட ப்ரமோஷனை ஆரம்பித்தோம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

அதேபோல் சினம் படத்திற்கும் முதலில் கோவையில் இருந்து தான் திரையரங்குகளில் பிரமோஷனை ஆரம்பிக்க வேண்டுமென விருப்பப்பட்டு தற்போது திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து வருகின்றோம். வரவிருக்கும் சினம் பலமானது. எல்லார் குடும்பத்திலும் இருக்கிற ஒரு கோபத்தை தான் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம் அதை கதை கருவாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான விஷயத்தை வைத்துதான் சினத்தை நாங்கள் எடுத்துள்ளோம் என்னுடைய சாதாரண எதார்த்தமான கேரக்டர் இந்த படத்தில் உள்ளது சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் அவனுக்கும் ஒரு குடும்பம் லவ் அதில் ஆரம்பித்து சூழ்நிலை அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது அதனுடைய எந்த இடத்தில் கோபம் அடைகிறான் என்பதை அழகாக இயக்குனர் அமைத்துள்ளார்.

publive-image

செப்டம்பர் 16"ம் தேதி சினத்தோடு  திரையரங்குகளில் தங்களை பார்க்க வருகிறோம் மேலும் ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் வித்தியாசமான அனுபவ முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளீர்கள் அதே மாதிரி இந்த சினம் படமும் உங்களை நல்ல பொழுதுபோக்காக அமையும் வகையில் ஒரு ஸ்பெஷல் கன்டென்ட் இருக்கிறது

அதனால் தான் இந்த படத்தை  நாங்கள் எடுத்தோம் எதார்த்தமான விஷயத்தில் இந்த படம்  அமைத்துள்ளோம். ரியல் லொகேஷன் சென்று படம் எடுத்து உள்ளோம் தற்போது அனுமதி எங்கேயும் கொடுப்பதில்லை இரண்டு மாதத்திற்கு முன்பு அனுமதி  வாங்கி படக் காட்சிகளை  இயக்க செய்தோம்.

மேலும் நடிகை  பல்லக் அவருடைய கேரக்டர் நம்ம வீட்டு  கதாபாத்திரம் போல் அமைந்துள்ளது. இது போன்று அழகான கேரக்டர்களும் இந்த படத்தில் அமைந்துள்ளார்கள். படத்தை பொறுத்தவரை  எதார்த்தமாக இருக்கும் - விக்டர் மிகப் பிடித்த கதாபாத்திரம் எனக்கு ஆக்சன் மூவி நன்றாக வருகிறது. கதையும் அதே போல வருகிறது. எமோஷனல் ஆன ஆக்சன்  படமும் மக்களிடம் கொண்டு செல்கிறது. ஆக்சன் படங்கள் மக்களுக்கு பிடித்தமான இருக்கிறது கதையை மட்டுமே நாங்கள் தேர்வு செய்கிறோம்.

ஜனவரியில் தான் எந்த படத்தையும் கமிட் செய்யவில்லை நோய் தொற்று காலத்தில் 2 வருடம் படம் எதுவும் வரவில்லை. நோய் தொற்று பாதிப்புகளை கடந்து  அடுத்தடுத்து படங்கள் வரிசையாக  வந்து கொண்டிருக்கின்றது. திரில்லர் மற்றும் பேய்  படங்கள் இயக்குனர் அறிவழகன் இயக்கிய ஈரம் செய்த மாதிரி எனக்கு ஒரு ஸ்கிரிப்ட்  செய்யுங்கள் ஏன கேட்டு உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arun Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment