கோவை மாவட்டம் திருமலையாம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய ரக திரையரங்க திறப்பு விழாவில் நடிகர் மோகன் கலந்து கொண்டார். அவர் மாணவர்களிடம் திரைத்துறை தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
அப்போது நடிகர் மோகன் கூறியதாவது; காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கல்லூரி வளாகத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்பது இந்தியாவிலேயே முதல்முறை என்பது பாராட்டுக்குரியது..
துணிவு, வாரிசு, எதற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன். விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். ஆனால் பட்டம் என்றால் அது ரஜினிக்கு தான்.. ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார், அந்த பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
படத்தின் வெற்றி இயக்கத்தின் கையில் தான் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். கதை இயக்கம் பிடித்தால் மட்டும் தான் படம் பண்னுவேன் என்று மோகன் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“