Advertisment

நடிகர் அறையில் இன்னொரு நடிகை; லாக் செய்த மனைவி: ஆனா நடிகர் அசரவே இல்லை!

நேற்று காலையில் நரேஷ் அறை கதவை திறந்து வெளியே வந்தபோது அவரை ரம்பா பிடித்து செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிகர் அறையில் இன்னொரு நடிகை; லாக் செய்த மனைவி: ஆனா நடிகர் அசரவே இல்லை!

பிரபல தெலுங்கு நடிகரான நரேஷ் நடிகை பவித்ராவுடன் ஒரே அறையில் இருந்ததை பார்த்த அவரது மனைவி ரம்யா ரகுபதி அவரை தாக்கும் வீடியோ காட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் நரேஷ். மூத்த நடிகர் கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலாவின் மகனான இவர், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாவுவின் சகோதரர். தெலுங்கு திரையுலகில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஏற்கனவே2 முறை திருமணமான நரேஷ் ரம்யா ரகுபதி என்பரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருடனே வாழ்ந்து வரும் நரேஷ்க்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நரேஷ் – ரம்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசலுக்கு நடிகை பவித்ரா லோகேஷ் தான் காரணம் என்று கூறப்பட்டுது. தெலுங்கு கன்னட மொழி படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பவித்ரா லோகேஷ் சமீபத்தில் தமிழில் வெளியான வீட்ல விஷேஷம் என்ற படத்தில் நாயகி அபர்னா முரளியின் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பவித்ரா லோகேஷூம், நடிகர் நரேஷூம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மைசூர் ஹூன்சூர் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியுள்ளனர். இதை தெரிந்துகொண்ட நரேஷின் மனைவி ரம்யா அவர்கள் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார்.

அங்கு வந்து பலமுறை அறை கதவை தட்டியும் திறக்காத நிலையில், ரம்யா அங்கேயே காத்திருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட ஊடகத்தினர் ஹோட்டலில் குவிந்துள்ளனர். அவர்களுடன் போலீசாரும் அங்கே வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் நரேஷ் அறை கதவை திறந்து வெளியே வந்தபோது அவரை ரம்பா பிடித்து செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த பவித்ரா எதுவும் நடக்காததுபோல் சிரித்துக்கொண்டே வெளியில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் நரேஷூம் ரம்பாவை பார்த்து சிரித்துக்கொண்டே பவித்ராவுடன் காரில் ஏறி சென்றுள்ளார். இந்த நிகழ்வு தெலுங்கில் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவித்ரா - நரேஷ் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

South Indian Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment