கேப்டன் கதை கேட்காம நடிக்க இருந்த படம், கடைசில சூர்யா நடிச்சாரு: நடிகர் ரமேஷ் கண்ணா சொல்வது எந்த படம்?

நடிகர் சூர்யா நடித்த ‘ஆதவன்’ திரைப்படத்தின் கதை குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த ‘ஆதவன்’ திரைப்படத்தின் கதை குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
captain

கேப்டன் கதை கேட்காம நடிக்க இருந்த படம், கடைசில சூர்யா நடிச்சாரு: நடிகர் ரமேஷ் கண்ணா சொல்வது எந்த படம்?

கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதவன்’. இந்த படத்திற்கு நடிகர் ரமேஷ் கண்ணா திரைக்கதை எழுதினார். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிதிருந்தார். மேலும், சரோஜா தேவி, வடிவேலு, மனோபாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisment

மிப்பெரிய இடைவெளிக்கு பிறகு நடிகை சரோஜா தேவி இந்த படத்தில் நடித்திருந்தார். இதுவே அவரது கடைசிப் படமாகும். ‘ஆதவன்’ திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடிகள் சூப்பர் ஹிட்டடித்தது. வடிவேலுவின் ‘பேனர்ஜி’ கதாபாத்திரம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

இப்படம் வெளியான போது இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் காலர் டியூனாக மாறிப்போனது. இந்நிலையில், ‘ஆதவன்’ திரைப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் ரமேஷ் கண்ணா இப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ஆதவன் பட கதை விஜயகாந்துக்காக பண்ணுனது.  

விவேக் நிறைய நடிக்க ஆரம்பித்துவிட்டார். விவேக் எங்கே சென்றாலும் ரமேஷ் ஒரு கதை வச்சிருக்கார் கேக்குறீங்களா என்று கேட்பார். நான் அசிஸ்டண்ட் இயக்குநராக எங்கு வேலை பார்த்தாலும் விவேக்கிற்கு ஒரு கதாபாத்திரம் கேட்பேன். தினமும் நானும் விவேக்கும் கடற்கரைக்கு நடைபயணம் செல்வோம். அப்படி தான் அந்த கதையை டெவலப் பண்ணினோம். 

Advertisment
Advertisements

அப்படி கதை ரெடி பண்ணி ராவுத்தரிடம் போய் கதை சொல்லிவிட்டேன். ராவுத்தர் போன் எடுத்து விஜயகாந்திற்கு கூப்பிட்டு ரமேஷ் கண்ணா கதை சொன்னார் நல்லாருக்கு அடுத்த படம் அதை பண்ணிருவோம் என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். பின்பு பொள்ளாச்சியில் இருந்த விஜகாந்திடம் கதை சொல்ல போனேன் அவர் ஏன் கதை கேட்க வேண்டும்.

கதையெல்லாம் கேட்க வேண்டாம் நீ போய் ஷூட்டிங்கு ரெடி பண்ணு என்று சொல்லிவிட்டார். நான் நடிக்க போனதால் அந்த கதையை பண்ண முடியவில்லை. அதன் பிறகு தான் அந்த கதையில் சூர்யா நடித்தார்” என்றார்.

Vijayakanth Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: