Advertisment

நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் ரூ. 2.70 கோடி மோசடி!

அவர்கள் இருவர் மீதும் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர். 

author-image
WebDesk
New Update
Actor Soori filed complaint against two producers for cheating him rs 2.70 crores

Actor Soori : தமிழ் திரையுலகில் தற்போது அனைவருக்கும் பரீட்சையமான முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் சூரி. தயாரிப்பாளர்கள் இருவரிடம் ரூ. 2.70 கோடியை கொடுத்து ஏமாந்துள்ளார்.

Advertisment

2015ம் ஆண்டு வீர தீர சூரன் படத்திற்காக முன்பணம் வாங்கினார் நடிகர் சூரி. அந்த படத்தில் நடித்ததிற்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தில் ரூ. 40 லட்சம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சம்பளத்தை தராமல், மேலும் கொஞ்சம் பணம் கொடுத்தால் நிலமாக வாங்கிக் கொடுத்து விடுகிறோம் என்று கூறி சூரியிடம் இருந்து ரூ. 2.70 கோடியை பெற்றுள்ளனர் அப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்ற அந்த தயாரிப்பாளர்கள் இப்பணத்தை கொடுத்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்ற நிலையில் பணமும் கைக்கு கிடைக்கவில்லை, நிலமும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அவர்கள் இருவர் மீதும் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர்.  ரூ. 50 லட்சத்திற்கும் மேல் இதில் இருப்பதால் இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment