தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த செலிபிரிட்டி ஜோடிகளாக நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் உள்ளனர். சமீபத்தில் இந்த ஜோடி கேரளா, மும்பைக்கு டூர் சென்ற போட்டோக்கள் இணையதளத்தை ஆக்கிரமித்தது.
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சூர்யாவும், ஜோதிகாவும் தங்கள் வீட்டின் முன், பொங்கலிட்டு கொண்டாடிய படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் சூர்யா நீல நிற குர்தாவுடன் வெள்ளை கலர் பைஜாமா அணிந்து சிரித்த முகத்துடன் பார்க்க அழகாக இருக்கிறார். ஜோதிகா, க்ரீம் நிற காட்டன் சில்க் புடவையில் பார்க்க சிம்பிளாகவும், கிளாசியாகவும் இருக்கிறார். அவர்களுடன் கார்த்தியும் காக்கி நிற சட்டையில், வேட்டியணிந்து இருக்கிறார்.
அவர்களுக்கு ரசிகர்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சூர்யா ஜெய்பீம் பட வெற்றிக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில், ”எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றி மாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்கிறார். மேலும் சில படங்களும் சூர்யா கைவசம் உள்ளன.
இதேபோல் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட நடிகர் அருண் விஜய்யும் சோஷியல் மீடியாவில், தான் வேட்டி, சட்டையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அருண்விஜய் தற்போது யானை மற்றும் பாக்ஸர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “