Advertisment

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா? வைரல் வீடியோ

48 வயதான நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட கருப்பு கோட் அணிந்து தான் கர்ப்பமாக இருப்பதை மறைக்க முயற்சிப்பதாகக் சிலர் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா? வைரல் வீடியோ

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருவது தற்போது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.

Advertisment

சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் மற்றும் குழந்தை ஆராத்யாவுடன் இருக்கும் வீடியோ பதிவு வெளியானது. இந்த வீடியோவில்,  ஐஸ்வர்யா ராய் தான் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார் என்று நெட்டிசன்கள் தங்களது யூகத்தைபதிவு செய்ததை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதில் அபிஷேக் பச்சன ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவும் கருப்பு நிற உடையில் இருந்தனர். அதேபோல் ஐஸ்வர்யா ராய், மற்றும் அவரது மகள் இருவரும் வெள்ளை நிற ஸ்னீக்கர்களை அணிந்திருந்தனர். அபிஷேக் அவர்கள் பின்னால் இளஞ்சிவப்பு நிற ஸ்வெட்சர்ட் மற்றும் சாம்பல் நிற ஜாகர்ஸ் அணிந்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் ரசிகர் பக்கத்தில் பதிவிட்ப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட தொடங்கிவிட்டனர்.  48 வயதான நடிகை ஐஸ்வர்யா ராய் நீண்ட கருப்பு கோட் அணிந்து தான் கர்ப்பமாக இருப்பதை மறைக்க முயற்சிப்பதாகக் சிலர் கூறியுள்ளனர். அதேபோல் மேலும் சலர் ஐஸ்வர்யா கர்ப்பத்தை மறைப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, ஐஸ்வர்யா ராய் தனது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் வரலாற்றுப்படமாக 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் பழிவாங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பழுவூர் இளவரசி ராணி நந்தினி, மந்தாகினி தேவி என ஐஸ்வர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

வீடியோவில் கர்ப்பமாக இருப்பது போன்று தெரிந்தாலும் படத்தின் போஸ்டரில், அவ்வாறு எதுவும் இல்லை என்று இந்த போஸ்டர் வெளியானதில் இருந்தே அவரது தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் தவிர,  ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், அருண்மொழி வர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளனர்.

1950களில் தொடராக வெளிவந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் நாவலான பொன்னியின் செல்வனை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். 2010-ல் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'ராவணன்' படத்திற்குப் பிறகு தென்னக நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாவின் இரண்டாவது இணைந்து நடித்துள்ளார்.

அதேபோல்,  1997-ல் 'இருவர்', 2007-ல் 'குரு' மற்றும் 2010-ல் 'ராவன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்துடன் நான்காவது இணைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி  வெளியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aishwarya Rai Bachchan Abhishek Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment