Advertisment

பஞ்சாப் பாடகர் கைது : அமலா பாலுக்காக அழுத்தம் கொடுத்த அரசியல் புள்ளி யார்?

அமலாபால் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் பல்விந்தர் சிங் மீது பாலியல் தொல்லை கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
பஞ்சாப் பாடகர் கைது : அமலா பாலுக்காக அழுத்தம் கொடுத்த அரசியல் புள்ளி யார்?

பிரபல பஞ்சாப் பாடகர் பல்விந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பல்விந்தர் சிங் தனக்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் எப்போதும் செய்திகளில் அடிப்படும் முக்கிய நடிகைகளில் ஒருவரான அமலாபால் தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் ஏ.எல் விஜயுடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 3 வருடங்கள் வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2017-ம் ஆண்டு பிரிந்தது.அதன்பிறகு நடிப்பில் தீவிரமாக களமிறங்கிய அமலாபால், திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடிடி தளத்தில் வெளியான கடாவர் படத்தை தயாரித்து தானே முதன்மை கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விவாகரத்துக்கு பின் பிரபல பஞ்சாப் பாடகர் பல்விந்தர் சிங்குடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமண செய்துகொண்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படங்கள் வெளியானது. பல்விந்தர் சிங் வெளியிட்ட இந்த புகைப்படங்களுக்கு இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

publive-image

அதே சமயம் இருவரும் ஒன்றாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு தங்களது காதலை பரிமாறிக்கொண்டனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்விந்தர்சிங் அமலாபால்க்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அமலாபால் தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்தனர். அதுவரை இவர்கள் இருவருக்கும் உள்ள நட்பு காதலை பற்றி பலருக்கும் தெரிந்திருந்த நிலையில், பல்விந்தர் சிங் கைதுக்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினை குறித்து தெரியவந்தது.

ஆனால் அதற்கு முன்பே திரைப்படம் தயாரிப்பு தொடர்பான வரவு செலவு கணக்குகள் தொடர்பாக ஐக்கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தற்போது விசாரணையில் இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக அமலாபால் பல்விந்தர் சிங் இருவரும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே அமலாபால் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் பல்விந்தர் சிங் மீது பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இதனிடையே தற்போது பல்விந்தர் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமலாபாலுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று கூறி பல்விந்தர் சிங் ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே பல்விந்தர் சிங் கைது நடவடிக்கையில் அரசியல் அழுத்தங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்விந்தர் சிங் மீது கொடுக்கப்பட்ட புகார் அமலாபால் நேரடியாக கொடுக்கவில்லை என்றும், தனது புகாரை கொடுக்கும் அதிகாரத்தை தனது வழக்கறிஞருக்கு அமலாபால் வழங்கியுள்ளதாகவும் அதன்படி அவரது வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் பல்விந்தர்சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

publive-image

பொதுவாக கிரிமினில் மற்றும் பாலியல் வழக்குளில் பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது ஆணோ தனது அதிகாரத்தை மற்றவர்களுக்கு வழங்கி புகார் அளிப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. தனது நிலத்தை விற்கவோ அல்லது பராமறிக்கவோ அதிகாரம் வழங்குவது வழக்கம். சொத்து தொடர்பான வழக்குகளில் தான் இது சாத்தியமே தவிர கிரிமினல் வழங்குகளில் தனக்கு பதிலாக இவர் புகார் கொடுப்பார் என்பது நடைமுறையில் இல்லை. ஆனால் ஒரு வழக்கறிஞர் அமலாபாலுக்காக புகார் கொடுத்து அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விழுப்புரம் போலீசார் பல்விந்தர் சிங்கை கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடி்கை தற்போது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கிரிமினல் வழங்குகளில் இதுவரை இந்த மாதிரியான நடவடிக்கைள் இல்லை. அதேபோல் அமலாபால் தற்போது வெளிநாட்டில் இல்லை. இந்தியாவில் சென்னை அல்லது கேரளாவில் தான் இருக்கிறார். ஆனால் தற்போது அவர் கேரளாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவர் நேரடியாக வந்து புகார் அளித்திருக்கலாம். அல்லது நேரில் வர முடியவில்லை என்றாலும் ஆன்லைன் முறையில் புகார் அளித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் தனது வழக்கறிஞர் மூலமாக புகார் அளித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

publive-image

மேலும் இது மாதிரியான பாலியல் புகார்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டவை என்ற நிலையில், தான் புகார் அளிக்காமல் மற்றொருவர் மூலமாக புகார் அளித்தது கடுமையாக விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த விவாகரத்தில் அமலாபாலுக்கு முக்கியமான அரசியல் அழுத்தங்கள் வந்ததனால்தான் இவ்வாறு புகார் அளித்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் அமலா பாலுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அரசியல் புள்ளி ஒருவர் தரப்பில் இருந்து அழுத்தம் வந்ததாக கூறப்படுகிறது. யார் அந்த அரசியல் புள்ளி? என பரபரப்பாக பலரும் விவாதித்து வருகிறார்கள்.

இதனிடையே பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் தனது சமூகவலைதள பக்கத்தில் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்வர்கள் தான் புகார் அளிக்க வேண்டும். இந்த புகார் கொடுக்கப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment