Advertisment

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை- நண்பர் கைது

விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் நடிகை அமலா பால், நண்பர் மீது புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Amala Paul

நடிகை அமலா பால்

நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisment

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், அமலாபால், ராஜஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் பரவின.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட தொழிலதிபர் அமலா பாலுடன் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். சிறிது நேரத்தில் இந்தப் படத்தை அவர் நீக்கிவிட்டார்.

இந்த நிலையில், விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் நடிகை அமலா பால் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது நண்பரும் தொழிலதிபருமான பவிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை அளிக்கிறார், மேலும் பண மோசடியும் செய்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பவிந்தர் சிங்கை கைது செய்தனர். நடிகை அமலா பால் மைனா, தெய்வ திருமகள், வேலை இல்லா பட்டதாரி, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அமலா பால், பவிந்தர் சிங் தொடர்பான திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவிய போது, அமலாபால் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment