முன்னாள் உலக அழகியும் நடிகையுமான திஷா பதானி நடிகர் சூர்யாவுடன் நடித்து வரும் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட பட்ங்களில் நடித்து வருகிறார்.
இதில் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னாள் உலக அழகியும், நடிகையுமாக திஷா பதானி நடித்து வருகிறார். சூர்யா 42 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்காக படக்குழு படப்படிப்புக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா திஷா தவிர, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக திஷா பதானி ஒரு மாத கால சென்னையில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரைப்படங்களின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய திஷா பதானி சென்னையில் இருப்பது நிச்சயமாக அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் இந்த படம், இரண்டு பாகங்கள் மற்றும் பத்து மொழிகளில் உருவாகிறது மற்றும் யூவி கிரியேஷன்ஸ் மற்றும்வம்சி கிருஷ்ணா, பிரமோத் மற்றும் ஸ்டுடியோ கிரீன். கே.இ ஞானவேல்ராஜா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இது தவிர, திஷா பதானி சித்தார்த் மல்ஹோத்ராவுடன் யோதா, அமிதாப் பச்சன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் ப்ராஜெக்ட் கே ஆகிய படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil