Advertisment

திருச்சி ஏர்போர்ட்டில் ஹேமமாலினி: குத்து விளக்கேற்றிய வண்ணப் படங்கள்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.

author-image
WebDesk
New Update
திருச்சி ஏர்போர்ட்டில் ஹேமமாலினி: குத்து விளக்கேற்றிய வண்ணப் படங்கள்

க. சண்முகவடிவேல்

Advertisment

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விமான நிலையத்தில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு விதமான புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சிகளை அமைத்து பொதுமக்களுக்கு இந்தியாவின் பெருமை குறித்து அறியும் வகையில் விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

publive-image

அந்த வகையில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை மாநிலங்களவை உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான ஹேமமாலினி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னை செல்ல இருந்த அவர் இந்த நிகழ்ச்சயில் பங்கேற்றுள்ளார். இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணைப் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிசிங் நயல், முனைய மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

publive-image

இந்த கண்காட்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமையை அறியும் வகையில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment