களவாணி படத்தில் கலகலவென நடித்து அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன்பின்னர் சுந்தர் சி நடிப்பில் உருவான கலகலப்பு படத்தில் அஞ்சலியுடன் இணைந்து கவர்சியாக நடித்தார்.
இதனை தொடர்ந்து அவர் நடித்த மற்ற படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அவர் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் அருள்நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடிக்கிறார். அதில் இரண்டு நாயகிகளில் ஒரு நாயகியாக ஓவியா நடிக்கிறார்.
விஷ்ணு நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படத்தில் வரும் பாட்டுக்கு நடிககை ஓவியா குத்தாட்டம் போடுகிறார். அதோடு மட்டுமல்லாமல்லாமல் அப்படத்தில் சில காட்சிகளிலும் நடிக்கிறாராம் ஓவியா.