சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை பவுலின் ஜெசிகாவின் வழக்கில் நாளுக்கு நாள் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில். தற்போது அவர் பயன்படுத்திய 3 செல்போன்கள் மற்றும் ஒரு டேப் கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பவுலின் ஜெசிகா. சமீபத்தில் வெளியான வாய்தா என்ற படத்தில் இவர் தீபா என்ற கேரக்டரில் நடித்திருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நெற்குன்றத்தில் தான் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காதல் தோல்விதான் காரணம் எனக் கூறப்பட்டது.
டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களில் தோன்றி பிரபலமான 29 வயதான பவுலின் ஜெசிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் பவுலின் ஜெசிகா மரணத்துக்கு காதல் தோல்விதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பவுலின் ஜெசிகா வழக்கு மீண்டும் சூடிபிடிக்கத் தொடங்கியது.
இதனிடையே தற்கொலை செய்துகொண்ட பவுலின் ஜெசிகா காணாமல்போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரது செல்போனிலும் சில முக்கிய தகவல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து முதல் ஆளாக தகவல் கொடுத்த பிரபாகரன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து ஐபோனை எடுத்துச்சசென்றதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஜெசிகா பயன்படுத்திய 3 செல்போன்கள் மற்றும் ஒரு டேப் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு்ளளது. மேலும் செல்போன்களில் உள்ள தடையங்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து செய்வு செய்ய தடயவியல் துறைக்கு செல்போன் அனுப்பபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பவுலின் ஜெசிகா மரணம் குறித்து பிரபாகரனிடம் 3 மணிநேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“