Advertisment

சிதம்பரம் கோவிலில் 'போலீஸ் ரசிகர்களு'க்காக போஸ் கொடுத்த சாய் பல்லவி: இதர ரசிகர்கள் ஏமாற்றம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சாய் பல்லவி பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.

author-image
WebDesk
New Update
சிதம்பரம் கோவிலில் 'போலீஸ் ரசிகர்களு'க்காக போஸ் கொடுத்த சாய் பல்லவி: இதர ரசிகர்கள் ஏமாற்றம்

க.சண்முகவடிவேல்

Advertisment

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தனது குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சாய் பல்லவி பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். அதற்கு முன்பே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் முதன் முறையாக 2005-ம் ஆண்டு வெளியாகிய ‘கஸ்தூரி மான்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.

பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து அனைவரையும் கவர்ந்த சாய் பல்லவி தொடர்ந்து தமிழில் மாரி, என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்து பான் இந்தியா பாடமாக வெளியாக கார்க்கி படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படியுங்கள்: திரையில் ஸ்டார்… தரையில் சாதாரண மனிதன்… விஜய் சேதுபதியை நினைத்து நெகிழும் சீனு ராமசாமி!

இதனிடையே இன்று தனது குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சாய்பல்லவி, அங்கு தன்னை யாரும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காக முகக்கவசம் அணிந்தபடி சுவாமி சரிசனம் செய்தார். அப்போது பாதுகாப்பிற்கு சென்ற காவலர்கள் இவரை அடையாளம் கண்டு பேசியதை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க முகக்கவசத்தை கழற்றியுள்ளார்.

publive-image

அப்போது அங்கு நின்றிருந்த பக்தர்கள் முககவசம் அணிந்திருந்தது சாய்பல்லவி என்று தெரிந்துகொண்டனர். ஆள் அரவம் இல்லாமல், கூட்டம் சேர்க்காமல் ரசிகர்களின் தொல்லைகளில் இருந்து, விடுபட்டு நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை சாய் பல்லவி  காவலர்களுக்காக முககவசத்தை கழற்றியதும், ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர்.  அதன்பிறகு போலீசாருக்கு மட்டும் போஸ் கொடுத்த போலீசார் உதவியுடன் சாமி தரிசனம் முடித்து அவர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sai Pallavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment