Advertisment

10 வருடங்களில் சாய் பல்லவி அடைந்த மாபெரும் உச்சம்! வைரலாகும் புகைப்படம்!

நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்றை வாழ்க்கை உங்களுக்கு பரிசாக அளிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாய் பல்லவி

சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

மலையாள படமான பிரேமம் மூலம் அறிமுகமாகி அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சாய் பல்லவி. மலர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்து இருந்தது. மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள "ரவுடி பேபி" பாடலுக்கு நடன ஆசிரியராக பிரபுதேவா பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் மாரி 2 படத்தில் "ரவுடி பேபி" பாடல் படமாக்கப்பட்ட போது எடுத்த புகைப்படத்தை நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் "நீங்கள் நினைத்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால் கவலைப்பட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அந்த விஷயத்தை உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்திருந்தால் நிச்சயம் ஒரு நாள், நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்றை வாழ்க்கை உங்களுக்கு பரிசாக அளிக்கும்.

அதற்கு உதாரணம்தான் இந்த புகைப்படம். நான் 10 வருடத்திற்கு முன்பு 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன், தற்போது அதே செட்டில் 10 வருடத்திற்குப் பின் பிரபுதேவாவுடன் புகைப்படம் எடுத்துள்ளேன்" என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment