Advertisment

இதுதான் லேடீஸ் செண்டிமெண்ட்... கணவரைப் பிரிந்தாலும் இருவரும் வாழ்ந்த வீட்டை விடாத சமந்தா!

கணவருடன் இருந்த நினைவுகளுக்காக சமந்தா இந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Samantha-

Samantha dazzling dance move for beast arbic kuthu song

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் சிறிய கேரக்டரல் நடித்து அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக அறிமுகமானர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Advertisment

தொடர்ந்து தென்னிந்திய திரையுலகின் ஹாட் தம்பதியாக வலம் வந்த சமந்தா – சைதன்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களது திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது இருவரும் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வரும் நிலையில், சமந்தா சகுந்தலம், யசோதா, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தி படங்களிலும் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது சமந்தா ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டால், சமந்தாவும் சைதன்யாவும், விவாகரத்து பெறுவதற்கு முன்பு இருவரும் ஒன்றாக வசித்தது இந்த வீட்டில் தான். தற்போது இந்த வீட்டை விலைக்கு வாங்கி அதில் சமந்தா தனது தாயாருடன் குடியேறியுள்ளார் என்று பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன் கூறியுள்ளார்.

publive-image

சமந்தா தற்போது வாங்கியுள்ள வீ்ட்டின் முன்னாள் உரிமையாளரான நடிகர் முரளி மோகன், சமந்தா – சைதன்யா இருவரும் திருமணம் முடிந்து வீடு பார்த்து கொண்டிருந்ததாகவும், அப்போது எனது வீட்டை வாடகைக்கு கொடுத்ததாவும் கூறியுள்ளார். இந்த வீட்டில் தங்கிக்கொண்டே புது வீடு கட்டிய நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் அந்த வீட்டில் குடியேறிவிட்டார். அதே சமயம் சமந்தாவும் வாடகை வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் முரளி மோகன் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். ஆனால் தற்போது சமந்தா முரளி மோகனிடம் அந்த வீட்டை விலைக்கு வாங்கியவர்களிடம் பேசி தனக்கு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டதால், அவர்களிடம் பேசி, தற்போது அந்த வீட்டை சமந்தாவுக்கு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் இந்த வீடு முரளி மோகன் விற்ற விலையை விட கூடுதலாகும். ஆனாலும் கணவருடன் இருந்த நினைவுகளுக்காக சமந்தா இந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment