பவர் பாண்டி படத்தின் ஆடியோ விழாவில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கு மட்டும் நன்றி சொன்னார். மாமனார் ரஜினி, மனைவி ஐஸ்வர்யா என அந்தக் குடும்பத்து பெயர்கள் எதையும் சொல்லவில்லை.
சில தினங்களுக்கு முன்னர் விஐபி 2 படத்தின் ஆடியோ வெளியீடு மும்பையில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தை இயக்குவது தனுஷின் மச்சினி சவுந்தர்யா. இதில் ரஜினி கலந்துகொள்வார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஷூட்டிங் காரணமாக கலந்துகொள்ளவில்லை. ஆனால் தனுஷின் மனைவியும் இயக்குநர் சவுந்தர்யாவின் அக்காவுமான ஐஸ்வர்யாவும் கலந்துகொள்ளவில்லை.
ஏற்கனவே குடும்பத்தில் புகைச்சல், விவாகரத்து என்றெல்லாம் பேச்சு அடிபடும்போது அதற்கு ஏற்றாற்போல ஐஸ்வர்யா இல்லாமல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார் தனுஷ்.