Advertisment

கொரோனாவில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய், ஆராதனா: அபிஷேக் மகிழ்ச்சி அறிவிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aishwarya rai and aaradhya recoverd from covid-19, aishwarya rai recovered from covid19, aishwarya rai discharged from hospital, aaradhya discharded, ஐஸ்வர்யா ராய் கொரோனாவில் இருந்து குணமடைந்தார், ஆராத்யா, அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், abhishek bachchan announced, amitabh bachchan teste covid19 positive, abhishek bachchan amitabh bachchan still remaining in hospital, aishwarya rai aaradhya tested covid19 negative

நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

Advertisment

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சன், கடந்த ஜூலை 11ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், அவரது மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய், அவர்து மகள் ஆராத்யா ஆகியோருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவாது மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கொரோனா வைரஸில் இருந்து மீண்டதால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அபிஷேக் பச்சன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி. அதற்காக என்றென்றும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்து குணமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகளும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதால், சமூக ஊடகங்களில் ரசிகர்கர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Aishwarya Rai Bachchan Amitabh Bachchan Abhishek Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment