தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ 18 வருடங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஜனவரி 17 அன்று அறிவித்தனர்.
இருவரும் தங்களை தனி நபர்களாக புரிந்து கொள்ள நேரம் எடுப்பதால் தனியுரிமை கோரினர். இருப்பினும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்தார்.
பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக மாறன் படம், நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியானது. நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி/சார், தி கிரே மேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களும் அவரிடம் உள்ளன.
அதே நேரம்’ ஐஸ்வர்யா சமீபத்தில் இந்தி-தமிழ் ரொமான்டிக் சிங்கிளான ’முசாஃபிர்’ என்ற மியூசிக் வீடியோவை இயக்கினார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது அடுத்த இயக்கத்திற்கு தயாராகிவிட்டதாகவும், அவரது மூன்றாவது படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்ததாக ’ஓ சாத்தி சால்’ படம் மூலம், ஐஸ்வர்யா இந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதற்கிடையே, தனுஷ் தனது இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இசைஞானி இளையராஜா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். தனுஷ் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவியது.
தொடர்ந்து ஐஸ்வர்யாவும், இரு மகன்களும் தனது மடியில் அமர்ந்து, முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
அதேநேரம், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் எனும் பெயரை மாற்றாமலே இருந்தார். அதனால், இந்த ஜோடி மீண்டும் சேரும் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால், தனுஷுடன் பிரிவு அறிவித்து, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்த தன் பெயரை இப்போது ஐஸ்வர்யா ரஜினி மாற்றியிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள், ஏன் தனுஷ் பெயரை எடுத்துட்டீங்க.. தயுவுசெய்து மீண்டும் தனுஷூடன் சேருங்கள் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.