Advertisment

ஷாலினி கையில் வெட்டு; பீறிட்ட ரத்தம்… அஜித் காதல் ஸ்டார்ட் ஆன தருணம் அதுதான்!

Ajith Kumar's birthday: நடிகர் அஜித்குமார் தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளில் அஜித் அளித்த ஒரு பழைய நேர்காணலில், ஒரு படப்படிப்பில் ஷாலினி கையில் வெட்டுபட்டு ரத்தம் பீறிட்டதையும் அஜித் - ஷாலினி காதல் ஸ்டார்ட் ஆன தருணத்தையும் விவரித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ajith kumar, ajith kumar birthday, ajith kumar age, rajinikanth, vijay, Shalini, ajith kumar wife, ajith love story, ajith, ajith kumar family, அஜித், அஜித்குமார், அஜித் பிறந்தநாள், அஜித் ஷாலினி காதல், அஜித் குமார் அடுத்த படம், ajith kumar age, rajinikanth, vijay, Shalini, ajith kumar wife, ajith kumar family

Ajith Kumar's birthday: நடிகர் அஜித்குமார் தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளில் அஜித்தின் ஒரு பழைய நேர்காணலைப் பார்க்கலாம். அதில், அவர் தனது மனைவி ஷாலினியை தனது முக்கிய ஆதரவாளர் என்றும் மோசமான விமர்சகர் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுல்லாமல், ஒரு படப்படிப்பில் ஷாலினி கையில் வெட்டுபட்டு ரத்தம் பீறிட்டதையும் அஜித் - ஷாலினி காதல் ஸ்டார்ட் ஆன தருணத்தை விவரித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்குமார் இன்று (மே 1) தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அஜித் ஊடகங்களை சந்திப்பதை தவிர்ப்பவர். அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து ரொம்ப நாளாகிவிட்டது. அவருடிஅய படத்தின் புரோமோஷன்போதுகூட அவர் ஊடகங்களை சந்திப்பது இல்லை. அஜீத் தனது படத்தின் ரிலீஸுக்கு முன்னரோ, பின்னரோ ஊடகங்களிடம் பேசுவதை பார்க்க முடியாது. ஆனாலும், அவருடைய படங்கள், முதல் நாள் வசூலில் இன்னும் சாதனை படைத்து வருகின்றன. தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த் மற்றும் விஜய்யைத் தவிர இத்தகைய ரசிகர்கள் இல்லை.

இருப்பினும், அஜித் குமார் எப்போதும் அப்படி இருந்ததில்லை. ஒரு காலத்தில் அஜீத் தனது படங்களை விளம்பரப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களிடம் கேள்விகளை எழுப்பி தொலைக்காட்சிகளில் தோன்றுவது வழக்கம். பில்லா (2007) திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் போது, ​​நகைச்சுவை நடிகர் சந்தானம் தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த 40 நிமிட உரையாடலின்போது, ​​அவர் தனது சிறுவயது முதல் ஒரு திரைப்பட நட்சத்திரமாக எப்படி மேன்மேலும் முன்னேறினார் என்பது வரை தனது வாழ்க்கையைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் தன்னுடைய மோசமான விமர்சகர் என்று அழைத்ததோடு தனது மனைவி ஷாலினியுடன் ஏற்பட்ட காதல் பற்றி கூறினார்.

publive-image

அமர்க்களம் (1999) படத்தின் படப்பிடிப்பின் போது ஷாலினியை அஜித் காதலித்தார். அப்போது அஜித், ஷாலினியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறினார்.

“அமர்க்களம் படத்தின் தயாரிப்பாளர், இந்த படத்தில் நடிக்க ஷாலினியை அணுகியபோது, ​​அவருக்கு நடிப்பில் விருப்பம் இல்லை. அவர் தனது படிப்பைத் தொடர ஆர்வமாக இருந்தார். அப்போது தயாரிப்பாளர் என்னை பேசச்சொல்லி சம்மதிக்க வைக்க முயற்சி செய்யலாமா என்று கேட்டார்கள். அதனால், ஷாலினிக்கு போன் செய்து, ‘நான் அஜித்குமார், உங்களுடன் நடிக்க விரும்புகிறேன். தயாரிப்பாளர்கள்கூட இதில் ஆர்வமாக உள்ளனர்.’ அவர், ‘இல்லை. எனக்கு நடிக்க விருப்பமில்லை. நான் படிக்க வேண்டும்.’ நான் அவருடை விருப்பத்தை ஒப்புக்கொண்டேன். ஆனால் தயாரிப்பாளரின் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் சந்திக்க விதிக்கப்பட்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன் ” என்று நடிகர் அஜித் தனது காதல் நினைவுகளைக் கூறினார்.

அவர் தனது முதல் பார்வையில் காதலை வெளிப்படுத்தினார். “நாங்கள் சேர்ந்து நடித்த முதல் ஷாட்டின் போது, தற்செயலாக அவருடைய மணிக்கட்டை வெட்டினேன். ஆனால் அவர் தொடர்ந்து நடித்தார். வெகு நேரத்திற்கு பிறகுதான் அவர் கைகளில் இருந்து இரத்தம் கசிந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தோம். அது (காதல்) அங்கே தொடங்கியது என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தனது காதல் ஸ்டார்ட் ஆன தருணத்தை நினைவு கூர்ந்தார்.

அஜித் தனது மனைவி ஷாலினியை தனது முக்கிய ஆதார மையம் என்றும் மோசமான விமர்சகர் என்றும் கூறினார். “அவர் என்னுடைய தீவிர விமர்சகர். சில சமயங்களில் நண்பர்கள் படம் நன்றாக இருந்ததாக ராஜதந்திரமாகச் சொல்வார்கள். ஆனால், ஷாலினியைப் பொறுத்தவரை, அவர் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் தனது பார்வையில் மிகவும் நேர்மையானவராக இருப்பார். மேலும், அவர் ஸ்கிரிப்ட்களில் தலையிட மாட்டார். ஆனால், அவர் என் மனைவி, என் வாழ்க்கையின் மையப்புள்ளி, அதனால் அவருடன் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் காதல் வயப்பட்ட பிறகு, அஜித் - ஷாலினி இருவரும் 2000 இல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ajith Actor Ajith Shalini Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment